A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)

Wednesday, October 21, 2009

மிழினத்திற்கு அரசியல் ரீதியிலான தீர்வை வழங்கி வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் ஏன் பல இலட்சம் படையினர்? - ஸ்ரீகாந்தா எம்.பி
[ புதன்கிழமை, 21 ஒக்ரோபர் 2009, 05:30.48 AM GMT +05:30 ]
இராணுவத்தினரின் தொகையை உடனடியாக குறைத்து அதற்காக செலவிடும் பணத்தை வடக்கின் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பின>ன் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தும் முயற்சிகளை கடுமையாக எதிர்க்கின்றோம்.
பாதுகாப்பு செலவு தொடர்பான குறைநிறைப்பு பிரேரணை விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

யுத்தம் ·முடிந்துவிட்டது. இதனால் வெற்றிக்களிப்பில் இருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். இது இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற யுத்தமல்ல.

படையினர், போராளிகள் உட்பட இவர்களுக்கு இடையே சிக்கி மரணமாகிய அனைவரும் எமது நாட்டு மக்கள். எனவே, மகிழ்ச்சியடைய முடியாது.

இந்த யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தனர். பெற்றோர்களை இழந்தனர்.

சிங்கள இராணுவ வீரர்களின் இறப்பாலும் அக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

இந்த முப்பது வருடகால யுத்தத்தில் வடபகுதி மக்கள் அபிவிருத்தியை காணவில்லை. அம்மக்களின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

யுத்தம் முடிவுற்ற நிலையில் பல இலட்சம் இராணுவத்தினரை ஏன் இன்னமும் வைத்துப் பராமரிக்க வேண்டும்?
தமிழினத்திற்கு அரசியல் ரீதியிலான தீர்வை வழங்கி நீதியை வழங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் ஏன் பல இலட்சம் படையினர்?
அதைவிடுத்து இன்னுமொரு போராட்டம் வெடிக்குமென்ற எண்ணத்தில் வடபகுதி மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் முகாம்களை அமைத்து வடக்கை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசு முனைந்தால் அபிவிருத்தி உருவாகாது.

எனவே, பல கோடி ரூபாய்களை படையினருக்கு செலவழிக்காது படையினரின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து அவர்களது சு·கமான வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டும்.

அதைவிடுத்து வடக்கில் நிரந்தர இராணுவ ·காம்களை நிலையாக அமைப்பது இதற்குத் தீர்வு கிடையாது.

இராணுவமும் இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இராணுவப்புரட்சிகள் முறியடிக்கப்பட்டன.

இலங்கையில் இராணுவப் புரட்சி ஏற்படும் நிலையுண்டா என வெளிநாட்டு பிரதிநிதிகள் அண்மையில் என்னிடம் கேட்டார்கள்.

இதனை மறுத்தேன். ஏனெனில் ஜனாதிபதிக்கு சிங்களவர் மத்தியில் வரவேற்பு உள்ளது.

இன்று ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேகா போட்டியிடுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. எனவே, இராணுவத்தை அரசியலில் இணைப்பது தவறானதாகும்.

ஓய்வுபெற்ற பின்னர் போட்டியிட்டால் பரவாயில்லை. ஆனால், ஜெனரலாக பதவி வகிக்கும் சரத் பொன்சேகாவை அரசியலில் இணைக்கக்கூடாது.

ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர். ஆனால், இராணுவத்துறை சார்ந்தோரை அரசியலில் உள்ளீர்ப்பது பிழையான விடயமாகும். வடக்கின் வசந்தம் வருவதற்கு முன்பே மழைக்காலம் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சரவையை, இராணுவத்தினரின் தொகையை குறைத்து தேசிய ரீதியில் நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும்.

No comments:

Post a Comment