A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)

Wednesday, October 21, 2009

பொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்தினால் கூட்டமைப்பு எதிர்க்கும் சபையில் நேற்று ஸ்ரீகாந்தா அறிவிப்பு

2009-10-21 05:17:48

முப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சி களின் பொதுக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கூறியது.



கொழும்பு, ஒக்÷ராபர் 21
முப்படைகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, எதிர்க்கட்சி களின் பொதுக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியைக் கடுமையாக எதிர்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றில் கூறியது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான குறைநிரப்புப் பிரே ரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பு உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தாவே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
தற்போது யுத்தம் முடிந்துவிட்டது. நடந்து முடிந்தது இரு நாடுகளுக்கிடையிலான யுத்தம் அல்ல, உள்நாட்டு யுத்தம். இதில் மரணித்தவர்கள் எமது நாட்டு மக்கள். அவர்கள் படையினராக இருக்கட்டும், தமிழ் மக்களாக இருக்கட்டும், எல்லோரும் எம்நாட்டு மக்கள்தான்.
தொடர்ந்தும் யுத்த வெற்றிபற்றி தொடர்பாகப் பேசி மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பது சரியல்ல. இந்த யுத்தத்திற்குக் காரணமான தேசிய பிரச்சினையைத் தீர்க்க அரசியல் தீர்வு உடன் முன்வைக்கப்படல் வேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள் இப்போது பெரும் துன்பத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் உறவினர்களை, குடும்பங்களை இழந்து அநாதைகளாகியுள்ளனர்.
25 வருடங்களாக வடக்கு கிழக்கில் அர்த்தமுள்ள அபிவிருத்திகள் எவையும் இடம்பெறவில்லை. அப்பகுதிகள் இனியாவது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
யுத்தம் முடிவுற்ற நிலையிலும் கூட இந்நாட்டுக்குப் பாரிய இராணுவக் கட்டமைப்புத் தேவையில்லை. அவர்களுக்காகச் செலவு செய்யும் கோடிக்கணக்கான ரூபா பணத்தை இந்நாட்டின் பொருளாதாரத்திற்குச் செலவிட முடியும்.
படையினர் சுயமாகப் படையில் இருந்து விலகும் திட்டம் ஒன்றை அரசு அறிமுகப்படுத்த வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகளும் உதவவேண்டும். இதன் மூலம் நாம் எமது நாட்டைக் கட்டியெழுப்பமுடியும்.
இந்தப் பாரிய படைக்கட்டமைப்பை அரசு வைத்திருப்பதற்கான காரணம் என்ன? தமிழர் தரப்பில் இருந்தும் மீண்டும் இராணுவ ரீதியான எழுச்சி ஏற்படும் என்று அரசு நினைத்தா இந்தப் படைக் கட்டமைப்பை வைத்திருக்கின்றது? இவ்வாறு வைத்திருப்பின் அது ஆரோக்கியமானதொன்றாக இருக்கமுடியாது.
அத்தோடு ஜெனரல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றமை பற்றிப் பேசப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பொதுக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவா அல்லது வேறு ஒருவரா என்று தெரிவிப்போம் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது முப்படைகளின் பிரதம அதிகாரி படையில் உள்ள ஒருவரை அரசியலில் இணைத்துப் பேசுவதையும் அவரை அரசியலில் இணைக்க முற்படுவதையும் நாம் எதிர்க்கின்றோம். பொதுவாகப் படையினர் அரசியலில் ஈடுபடுவது நல்லதல்ல.
ஓய்வு பெற்றதன் பின்பு அரசியலில் ஈடுபடலாம். இலங்கை வரலாற்றில் அப்படி எத்தனையோ பேர் அரசியலில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆகவே, சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது என்றார்.

No comments:

Post a Comment