கூட்டமைப்பின் டில்லி விஜயம்
SUNDAY THINAKURAL [19 - April - 2009]
தாயகன்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசியலில் முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நடத்தும் நாடகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பழுத்த அரசியல் வாதிகள் சிலர் நடிகர்களாக இணைந்துள்ளமை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழரின் இன்றைய அவலங்கள், பேரழிவுகளுக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசுகள் நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியடைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் உலகத் தமிழர்கள் உள்ள நிலையில் அந்தக் கூட்டணியை வெற்றி பெற வைக்கும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த அரசியல் வாதிகள் ஈடுபட்டுள்ளமையே இந்த அதிர்ச்சிக்கு காரணமாகும்.
இந்தியாவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தம்மை பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லையென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இந்திய அரச உயர்மட்டத்தை சந்தித்தவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா கூறியுள்ள நிலையில், இச்சந்திப்பை தொடர்ந்து மத்திய, தமிழக அரசுகள் செயும் காநகர்த்தல்கள் மாவை சேனாதிராஜாவின் கூற்றை பொயாக்கியுள்ளன.
இந்திய அரச உயர்மட்டத்துடனான தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சந்திப்புக்கு பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கைகள் தமிழ்தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் உள்நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளன.
பிராந்திய நலனுக்காக மத்திய அரசும் தனது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக அரசும் இலங்கைத் தமிழர்களை பலி கொடுத்து வந்த நிலையில் தற்போது தமது தேர்தல் வெற்றிக்காக இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட போட்டுள்ள சூழ்ச்சி வலையில் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிந்து கொண்டே விழுந்தது ஏன்? என்பது தான் தமிழ் மக்களின் கேள்வி.
தமிழ் மக்கள் மீது இந்திய அரசே போரை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலும் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் அந்த அரசு படுதோல்வியை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ள நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய அரச உயர்மட்டத்தினரை தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி சந்திக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகவேயுள்ளது.
இலங்கையில் நடக்கும் போரில் அழிந்து வரும் தமிழ்த் மக்களுக்கு இந்திய அரசு துரோகமிழைத்து வரும் நிலையில் அதன் தேர்தல் கா நகர்த்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துணை போயுள்ளமை இந்திய அரசைப் போன்றே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் முதுகில் குத்திவிட்டதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்திய அரசின் உயர் மட்டத்தினருடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு, அதனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், தமிழ் மக்களின் எதிர்ப்புணர்வுகள் தமிழ் த்தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் மூலம் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அடையவுள்ள அரசியல் ஆதாயங்கள் குறித்து ஆராய வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் போர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையிலும் இந்தியாவில் தேர்தல் பிரசாரங்கள் தமிழக முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணிக்கெதிராக உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையிலுமே இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய புதுடில்லி வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு திடீர் அழைப்பு இந்திய அரசிடமிருந்து விடுக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்திருந்த போது இங்குள்ள தமிழ்க்கட்சிகளை சந்தித்து பேசியிருந்தார். அப்போது விபரமாக பேசுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு வருமாறும் அதற்கான அழைப்பு விடுக்கப்படுமெனவும் கூறியிருந்தார்.
ஆனால் அதன் பின்னர் அந்த விடயம் கிணற்றில் போட்ட கல்லாகவேயிருந்தது. இவ்வாறான நிலையில் போர் உக்கிரமடைந்து தமிழ் மக்கள் பெரும் மனிதப் பேரவலங்களை சந்திக்கத் தொடங்கினர். அப்போதெல்லாம் இந்திய அரசை தலையிடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட பலர் வலியுறுத்தினர். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவேயிருந்தது.
தமிழ் மக்களை போரின் அழிவிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டுதல்கள் விடுக்கப்பட்ட போதும் அதனை ஏற்க மறுத்த இந்திய அரசு அவர்களை அழிப்பதற்கான சகல வளங்களையும் இலங்கையரசுக்கு அள்ளிக் கொடுத்தது. அதுமட்டுமன்றி தனது இராணுவ வீரர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்து களமுனை உதவிகளையும் வழங்கியது.
இவ்வாறான நிலையில் இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் கூட்டணிக் கட்சியான தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வுக்கு எதிராகவும் தமிழகத்தில் மட்டுமன்றி பல மாநிலங்களிலும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. மக்கள் தீக்குளிப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், வீதிமறியலென பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் இந்திய தேர்தலும் வந்தது. இந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினையையே தமது பிரதான பிரசார ஆயுதமாக பாவிக்கத் தொடங்கினர். இது இந்திய மத்திய அரசும் தி.மு.க.வும் எதிர்பார்த்ததை விட பலமடங்கு பாதிப்புகளை, அரசியல் சரிவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தியது.
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய அரசின் அணுகுமுறை இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வியை உறுதிப்படுத்தியது. அனைத்துக் கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை உள்ளடக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இலங்கைத் தமிழருக்கு ஆதரவளித்தாலே தேர்தலில் வெற்றி பெற முடியுமென்ற நிலைமையை ஏற்படுத்தியது.
இவ்வாறான நிலையிலேயே இதுவரை ஏறெடுத்தும் பார்க்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பை டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய மத்திய அரசு, இலங்கைத் தமிழரின் பிரச்சினையில் தனக்கு அக்கறை உள்ளதைப் போல் காட்டிக் கொள்ள முற்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் மூலம் சில காநகர்த்தல்களைச் செயவும் அது திட்டமிட்டது.
இந்திய அரசின் டில்லிக்கான அழைப்பின் தந்திரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்திருந்தது. எனவேதான் இந்த அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசின் அழைப்பின் சதி தொடர்பில் இக்கூட்டத்தில் நன்கு ஆராயப்பட்டது.
இந்தப் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் அதன் தலைவரான இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளில் நின்றகாரணத்தால் பங்கேற்கவில்லை. மாவை சேனாதிராஜா தலைமையிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பெரும்பாலான எம்.பிக்கள். இந்திய அரசின் அழைப்பை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன், இந்திய அரசு தமிழ்மக்களுக்கு செது வரும் துரோகத்தையும் இந்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அழிவுகளையும் சுட்டிக் காட்டினர்.
இந்திய அரசின் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால் இந்திய மத்திய அரசு அடையப் போகும் இலாபத்தை சுட்டிக்காட்டியதுடன் நாம் இந்தியத் தரப்பை சந்தித்தால் அது இலங்கையில் தோன்றியிருக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் தமிழ் நாட்டிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் ஏற்பட்டிருக்கும் அக்கறைகளை மழுங்கடித்து விடுமென்றும் எச்சரித்தனர். இந்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாதென்பதில் ஸ்ரீகாந்தா எம்.பி.யே தீவிரமாக இருந்தார்.
ஆனால் இந்திய அரசின் அழைப்பை உதாசீனப்படுத்தக் கூடாதென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான மாவை சேனாதிராஜா வாதிட்டார். உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் இந்த விடயத்தை கையாள வேண்டுமென அவர் எம்.பிக்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் அது எடுபடவில்லை.
இதையடுத்து இவ்விடயத்தை தமிழகத்திலுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரியப்படுத்துவதென முடிவு செயப்பட்டது. இதேவேளை, சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் எப்படியும் இச்சந்திப்பை கைநழுவவிட மாட்டார்கள் என்பது ஏனைய உறுப்பினர்களுக்கு தெரிந்திருந்தது.
எனவே இவ்விடயத்தை பகிரங்கப்படுத்த நினைத்த ஸ்ரீகாந்தா எம்.பி.இந்திய அரசின் அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்து விட்டதாகக் கூறி அதற்கான காரணங்களையும் விளக்கி ஊடகங்களுக்கு செதி வழங்கினார். இதனால் இவ் விவகாரம் மறுநாள் பரபரப்புக்குள்ளானது.
ஊடகங்களில் செதி வந்ததினால் தர்மசங்கட நிலைக்குள்ளான மாவை சேனாதிராஜா மறுநாள் அது தொடர்பாக விளக்கமளித்து ஓர் அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கினார். அதில் இந்திய அரசின் அழைப்பை நிராகரிக்கவில்லையென்றும் அது குறித்து சம்பந்தனே முடிவெடுப்பார் என்றும் தெரிவித்திருந்தா
இந்திய அரசின் அழைப்பை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிராகரித்ததை தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழர்களும் தமிழக எதிர்க்கட்சிகளும் வரவேற்றிருந்த நிலையில் மாவை சேனாதிராஜாவின் விளக்கம் சந்தேகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் இந்திய அரசின் அழைப்பை ஏற்கக்கூடாதென வற்புறுத்தினர். இதனை புலிகள் ஆதரவு இணையத் தளங்களும் பெரிதுபடுத்தி பிரசுரித்தன.
இந்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாதென்பதில் உறுதியாகவிருந்த ஸ்ரீகாந்தா எம்.பி.அது தொடர்பில் தனது கருத்துக்களை ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். ஸ்ரீகாந்தாவின் கருத்தே தமிழ் மக்களின் கருத்தாகவும் இருந்தது. ஸ்ரீகாந்தாவின் கருத்துக்கள் சம்பந்தன், மாவை போன்றோருக்கு எரிச்சலையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.
அதேவேளை இந்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாதென வலியுறுத்திய ஸ்ரீகாந்தாவும் பெரிய தமிழ்த் தேசிய வாதியல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திக்க வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்க வேண்டுமென இவர் கட்சிக்குள் போராட்டம் நடத்தியிருந்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்திய அரச உயர்மட்டத்தை சந்திப்பதை இலங்கையரசு விரும்பாததால் ஸ்ரீகாந்தாவின் மூலம் அந்த சந்திப்பை குழப்பியடிக்க முற்பட்டிருக்கலாமெனத் கூறும் உட்கட்சித் தகவல்கள், மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வேண்டுமென்பதில் ஸ்ரீகாந்தா விடாப்பிடியாக விருந்த விடயத்தை சுட்டிக் காட்டுகின்றன.
ஸ்ரீகாந்தா எம்.பி.மட்டுமன்றி சிவநாதன் கிஷோர் எம்.பி.அரச உயர்மட்ட அமைச்சர்களுடன் கொண்டுள்ள நெருங்கிய தொடர்புகளையும் வினோநோத ராதலிங்கம் எம்.பி.பாராளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையையும் அதன் முன் அவர் அரச உயர்மட்டத்தினருடன் நடத்திய சந்திப்புக்களையும் இந்த தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்திய அரச உயர்மட்டத்தினரை சந்திக்கக் கூடாதென்ற கருத்து தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் வந்ததல்ல. தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே வெளியிடப்பட்டதாக கூறப்படும் அதேவேளை இக்கருத்தை ஸ்ரீகாந்தா எம்.பி.யை தவிர வேறு எவரும் பகிரங்கமாகக் கூற முன் வரவில்லை.
அதற்காக ஏனைய எம்.பி.க்கள் இந்திய அரசுடனான சந்திப்புக்கு ஆதரவெனக் கூறிவிட முடியாது.
இதேவேளை இந்திய உயர்மட்டத்துடனான சந்திப்பை விரும்பாத தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏனைய எம்.பி.க்களை இச்சந்திப்பில் பங்கேற்குமாறு இந்த 4 எம்.பி.க்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சந்திப்பை கடுமையாக எதிர்த்த கஜேந்திர குமார் பொன்னம்பலத்தை இந்தியாவிற்கு வந்து சந்திப்பில் பங்கேற்குமாறு தொலைபேசி மூலம் மாவை சேனாதிராஜா பல தடவைகள் வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புலம்பெயர் தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே தாம் இந்திய அரசின் அழைப்பை ஏற்றதாக சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செதிகள் புலம்பெயர் தமிழ் மக்களை விசனமடைய வைத்துள்ளது.
உலக நாடுகளில் தமிழர் போராட்டங்கள் வீறு கொண்டுள்ள நிலையில் இந்த 4 எம்.பி.க்களினதும் செயற்பாடுகள் தம்மை வெட்கித் தலை குனிய வைப்பதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளன. தமிழரின் அழிவு நிலைக்கு காரணமான இந்தியாவிடம் தாங்கள் அடிமைப்பட்டதுமன்றி தங்களது போராட்டத்தையும் இவர்கள் காட்டிக் கொடுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகத் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களில் இன்று, விடுதலைப் புலிகள் தமிழர்களின் சுதந்திரப் போராளிகள். அவர்களை பயங்கரவாதப்பட்டியலிலிருந்து நீக்குவதுடன் புலிகளுடன் மட்டுமே பேச்சுகள் நடத்தப்பட வேண்டும். உடனடியானதும் நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் இந்திய அரசின் உயர்மட்டத்தை சந்தித்த இந்த 4 எம்.பி.க்களும் இது தொடர்பில் வலியுறுத்தினார்களா? அல்லது இந்தக் கருத்துக்களையாவது இந்திய அரச உயர்மட்டத்துக்கு தெரியப்படுத்தினார்களா? என்பதை தமிழ் மக்களுக்கு இவர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும்.
இதேவேளை இந்த 4 எம்.பி.க்களையும் இந்திய அரசு வேண்டாத விருந்தாளிகளாகவே நடத்தியதாக தமிழக செதிகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்கள் கூறிய போர் நிறுத்தம்,தமிழரின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனனோ அல்லது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனோ எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்திய அரச உயர்மட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்புக்கிடையிலான பின்னணியில் தமிழக முதல்வர் கருணாநிதியே இருந்துள்ளார். இந்த 4 எம்.பி க்களையும் பயன்படுத்தி சரிந்து போயுள்ள தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியின் செல்வாக்கை உயர்த்த கருணாநிதி செத சூழ்ச்சிக்கு இவர்கள் பலியாகிப் போயுள்ளனர்.
இவ்வாறு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்திய அரசின் உயர்மட்டத்தோடு சந்திப்பை நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த 4 எம்.பி.க்களும் தமிழ் மக்களுக்கு விமோசனத்தையா, சாபத்தையா பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பதற்கு விரைவில் காலம் பதில் சொல்லும்.
அதேவேளை இந்திய அரச உயர்மட்டத்துடனான தமது சந்திப்பு தொடர்பில் ஸ்ரீகாந்தா எம்.பி.வெளியிட்ட கருத்துக்கள் தனிப்பட்ட ஒருவரின் கருத்து என்றும் தனிப்பட்ட கருத்துக்களுக்கு பதில் கூறும் பழக்கம் தனக்கு இல்லை என்றும் இரா.சம்பந்தன் பதிலளித்திருக்கிறார்.
A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2009
(47)
-
▼
April
(12)
- பொதுமக்கள் இழப்பு குறித்து ஸ்ரீகாந்தா தெரிவித்த கர...
- கூட்டமைப்பின் டில்லி விஜயம் SUNDAY THINAKURAL [...
- வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் எவரும் கொல்ல...
- THE SUNDAY LEADER19th April 2009 The choice befor...
- India playing double game: TNA MPSaturday, 18 Apr ...
- Lanka Tamil MPs head for DelhiTIMES OF INDIA 12 Ap...
- Puthinam
- INTERVIEW TO BBC - 10th of April
- இந்தியாவின் அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ந...
- DAILY MIRROR11th of April 2009TNA split on talks w...
- போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா ஏற்பாடு செய்தால்...
- LTTE ready for ceasefire, says pro-rebel Tamil party
-
▼
April
(12)
No comments:
Post a Comment