A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)

Tuesday, April 21, 2009

வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை. நாடாளுமன்றில் ஸ்ரீகாந்தாவோடு அமைச்சர்கள் வாதம்

SOURCE: UTHAYAN
22 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:05 மு.ப இலங்கை]

வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவேயில்லை என்று அரசுத் தரப்பில் நேற்று கடுமையாக மறுக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுமுன்தினம் பாதுகாப்பு வலயத்தில் ஆயிரத்து 600இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.அதைக் கேட்ட அமைச்சர்கள் ஸ்ரீகாந்தா மீது பாயத் தொடங்கினர். "இராணுவத்தினர் பொதுமக்களைக் கொலை செய்யவில்லை. சர்வதேசத்துக்குப் பிழையான தகவல்களைக் கொடுக்க ஸ்ரீகாந்தா எம்.பி. முயல்கிறார்." என அமைச்சர் மஹிந்த ரட்ணதிலக கூச்சலிட்டார்."அங்கு படையினர் மக்களைக் கொன்றனர் என்று பதுங்குகுழிகளுக்குள் இருக்கும் பிரபாகரனா உங்களுக்குத் தகவல் கொடுத்தார்?" என்று ஸ்ரீகாந்தாவிடம் கேட்டார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே.பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்த ஸ்ரீகாந்தா எம்.பியின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.அப்போது எழுந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, "வன்னியில் சிவிலியன்களைப் படையினர் கொன்றனர் என்ற தகவலை ஸ்ரீகாந்தா எங்கிருந்து பெற்றார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். அவர் பிழையான தகவல்களை வழங்கி சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்த முயல்கின்றார்" என்று கூறினார். இதனால் ஸ்ரீகாந்தாவுக்கும் அமைச்சர்களுக்குமிடையில் கடும் வாய்ச்சண்டை நடைபெற்றது.

No comments:

Post a Comment